Tuesday, May 1, 2007

எங்கு தொலைந்தது
என்னுடைய பிரியங்கள்
மெல்லிய கம்பளிப் பூச்சியின்
மெதுமையாய் என்னை தடவிப் போகிறது
உன் நினைவு

எது குறித்தும் குறைபடாது
எது குறித்தும் சலிப்படையாது
எந்த எதிர்பார்ப்புமின்றி கடக்கிறது
நாட்கள்

கரகரத்த குரலில் நீ பாடுகிற
பாடலைக் காட்டிலும் இனிமையானதா
நீயற்ற இந்த வசந்தம்

வந்துவிடு சஷி

1/10/07 10:59 PM

3 comments:

said...

அருமையான எளிமையான கவிதை..எழுதப்பட்ட உணர்வு மனதை கனப்படுத்தியது..வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்!

said...

:)

இந்த சந்தம் நல்லாருக்கு

படித்தவுடன் உள்ளுக்குள்ள ஒரு மலர்தல்

வந்துவிடு சசி ல கொப்பளிக்கிற ஏக்கமும் துக்கமும்..

said...

//கரகரத்த குரலில் நீ பாடுகிற
பாடலைக் காட்டிலும் இனிமையானதா
நீயற்ற இந்த வசந்தம்//
நிச்சயமாக இல்லை.