Tuesday, May 1, 2007

சிறுமிக்கு...















1.
இடுப்பைப் பிடித்தபடி தூங்கிப் போகும் சிறுபெண்
என்னுடைய காதலை அது உண்டு பண்ணும் அச்சத்தை
உணர்துகிறது அருகாமை
உனக்கு மட்டுமாய் நான் இல்லாதிருப்பதால்
என் இடைபற்றி தூங்கமுடியாத காலங்களில்
நானும் வருத்தமடைவேன்
என் சிறுபெண்ணின் துயரத்தை எண்ணி
என்னிடையில் நீ வரமுடியாது என்பதாலும்
...

2.
எது குறித்தும் கவலைகள் இன்றி
படர்ந்திருக்கும் கைகள் அந்நியமாயிற்று
நீண்டு உருண்ட கைகள் எனக்கு பழக்கமற்றவை
அந்நியமானவை
இரவில் தனித்து உறங்கும் மெல்லிய
விரல்கள் ஞாபகத்தை எடுக்கிறது
தூக்கதில் விழித்துக் கொண்டு அழுகின்ற
ஆன்மாவை
அணைத்துக் கொள்கிறாய்
ஒரு சிறு குருவியின் ஏக்கம் கலந்த தனிமை
என் கட்டில் விரிப்புக்களை நனைக்கிறது

என் பிரிய குட்டியம்மா
யார் குறித்தான ஏக்கமும் நிலையானதல்ல என்கிற
கற்பிதத்தையே நானும் உன்னிடம் சேர்ப்பிக்கிறேன்
என்னுடைய பரிசாய்....

3.
எது குறித்தும் கவலையற்று
அந்நியமாகிப் போன உன்னை
முத்தமிடுகிறேன்
நீ இன்னும் என்னருகில் இருப்பதாய்
உன் வாசம் நாசியில் இருப்பதாய்
நினைத்துக் கொண்டிருக்கிறேன்
இருவருமாய் தனித்திருக்கும் போது
பெரிய வீதிகளை கடக்க காத்திருக்கும்
இரு சிறுமிகளைப் போல
மெளனம் நீடிக்கிறது
உன்னுடைய பார்வை
இடைவெளிகளை நிரம்பவே முடியாது என்கையில்
உன் முன் குற்றவாளியாய் மண்டுகிறேன்
நீ தான் என்னுடைய இரட்சகி
என்னுடைய பிரிய சாத்தான்
என்னை இரட்சித்து அன்பு செலுத்து
என் பாவங்களையெல்லாம் மறந்து
உன் சிரிப்பால் என்னை ஆசீர் வதி
உன்னுடைய பாரா முகத்தை கொண்டு
என்னுடைய இந்த வாழ்வை வாழமுடியாது-தாயே
எனனை இரட்சித்துக் கொள்...

1/13/07 7:57 PM

0 comments: