Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Wednesday, January 10, 2007

The scent of green papaya



சிறுமி மூ, ஒரு வீட்டுக்கு வேலைக்காரியாக போகிறாள். அங்கு வேலைக்காரியாய் அவளுடைய சிறு பிராயம் கழிகிறது.
அவள் வயதொத்த வீட்டின் சிறுவன்கள் அவளை பயமுறுத்திக் கொண்டும் அவள் தோய்த்த ஆடைகளை எடுத்துக் கீழே போட்டும் அவள் வீடு கழுவுகிற வாளிக்குள் சிறுநீர் கழித்தும் அவளுக்கு சிரமம் கொடுக்கிறார்கள்.
மேலே முதிய மாமியாரும்,அந்தக் குடும்பத்தை நடத்துகிற அந்த வீட்டின் மருமகள் - என்றோ செத்துப் போன மகள் நினைவில் மூ மீது அன்பு செலுத்துகிறாள். அங்கு வேலைசெய்யும் வயது முதிர்ந்த வேலைக்காரி மூ வுக்கு பப்பாக் காயில் சமைக்கக் கற்றுக் கொடுக்கிறாள். காயாய் மரத்திலிருந்து பப்பாக் காயை பிடுங்கும் போது விழுகிற பால் முதல் இலை, குழை, வீடு (நாற்சார் வீடு போன்ற ஒரு வீடு) என்று எல்லாமே எமக்கு பழக்கமான ஒரு உணர்வு. துல்லியமான ஒளிப்பதிவு. அடிக்கடி மூவைத் தேடி வந்து மேலே இருக்கும் கிழவியின் நலன் விசாரித்துப் போகும் கிழவன். அவளை ஒரு முறையாவது பார்க்க எப்படியாவது சந்தர்ப்பம் கேட்டு அவளைக் கேட்ட படி. பொறுப்பற்று முன்பொருமுறை காசுடன் வீட்டை விட்டு ஓடிய வீட்டு முதலாளி, எப்போதும் எதோ துக்கத்தில் திரியும் அவருடைய மனைவி.
அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் ஒரு இசைஞன், மூத்த மகனின் நண்பன். அவன்மீது ஈர்ப்பு உண்டாகிறது சிறுமி மூவுக்கு. தகப்பன் திரும்பவும் மனைவியின் காசையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறான். வீட்டில் சிரமமான நிலை. கிழவி மருமகளையே குறை சொல்லுகிறார்.
பத்து வருடங்கள் கழிகிறது மூ இப்போது பெரிய மனுசி. வீட்டுக்கார அம்மா வருத்தமாய் படுத்த படுக்கையில் (கிழவி இருந்த இடத்தில்). வீட்டுக்கு மூத்த மருமகள் அவள் இடத்தில். ஒரு வேலைக்காரி வைக்கிற நிலையில் அவர்கள் இல்லை என்பதால் அவளை அவளுக்கு பிடித்தமான அந்த இசைஞர் வீட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறார்கள். போகும் போது அந்த அம்மா மகளைப் போல் சீனத்து பாரம்பரிய உடையும் காப்பும் கொடுதத்தனுப்புகிறார்.
ஆரம்பத்தில் அவளைக் கண்டு கொள்ளாத இசைஞன் பின்னர் அவளுடைய வேலைகளால் அவளை உணர்கிறான். அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறான் பின்னர் இருவரும் மணக்கின்றனர். திரைப்படம் முடிகிறது.
ஒரு சிறுமியின் வாழ்வு பற்றியதே இந்தப் படம்.
அவள் சிறுமியாய் இருந்த போதே என்னைப் பொறுத்த வரை என்னுடைய கதை முடிந்து விட்டது அதுவும் பெரிய மூவை சிறுமி அளவுக்கு இரசிக்க முடியவில்லை. சிறுமியாய் பூச்சியை எறும்பை இரசிப்பதை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு வளந்தவளாய் காட்டும் போது ஏதோ பொருந்தாதது போன்ற உணர்வு. பெரிய மூ இயல்பாய் வரவில்லை. பின்னர் அவளுடைய வாழ்வும் அவ்வளவு யதார்த்தமாய் இருக்கவில்லை..

Monday, January 8, 2007

பாலியல் சொற்களும் குழந்தைகளும்


முதல்முதலாக இந்த கெட்ட வார்த்தை எப்போது எனக்கு பரிச்சயமானது என்று தெரியவில்லை ஆனால் இந்த கெட்ட வார்த்தைகள் எல்லாம் பெண் உறுப்பு என்கிற புரிதல் காலம் தாழ்த்தியே வந்தது. அது வரை பெரியவர்களால் மறுக்கப்பட்டு மீறிய போது அடி வாங்கிய அந்தச் சொற்கள் கிளுகிளுப்பூட்டுபவையாகவும் மீற சொல்வதாகவுமே இருந்து வந்தன. நான் 6-7 வயதாக இருந்த போது என் வயதொத்த நண்பிகளுடன் சேர்ந்து விளையாடுகிற விளையாட்டுக்கள் பூடகமானவை அவை இந்த சொற்களை உள்நுழைப்பவையாக இருக்கும். அந்த விளையாட்டில் உடம்பில் தெரிகிற உறுப்புகளை ஒருவர் காட்டுவார் அதற்கு மற்றவர்கள் 'டை' சேர்க்க வேண்டும்.
கண் என்று விளையாடுபவள் சொல்வாள் விளையாட்டில் கலந்து கொள்பவள் 'கண்டை" என்பாள் இப்படியே வாய்டை மூக்கு டை என்ற படி கடைசியாக மிக மிக சாதுவாய் முகத்தை வைத்துக் கொண்டு புண்ணைக் காட்டுவாள் விளையாடுபவள் அந்த இடத்துக்கு வரும் போது தான் சொல்ல வருகிற சொல் என்ன என்பதையே மறந்து அந்த சொல்லை சொல்லி விடுவாள் மற்றவள். அவள் கெட்ட வார்த்தை சொன்னதாய் அம்மாட்டை சொல்லப்போறன் என்று பயமுறுத்தியபடியிருப்பாள் விளையாட்டை தொடக்கியவள். இது தான் விளையாட்டு. யாரிந்த விளையாட்டைக் கண்டுபிடித்தார்கள் என்று ஞாபகமில்லை ஆனால் இந்த விளையாட்டு பெண்களாலே விளையாடப்பட்டது ஏன் இந்த விளையாட்டில் ஆண்களை இணைத்துக் கொள்ளவில்லை என்பது இன்று வரை எனக்கு புதிர்.

இந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்ன போது சாதாரணமாய் கடந்து போவதுண்டு ஆனால் தமிழில் சொல்லும் போது பயங்கரக் கோபம் வரும். சாதாரணமாக சொல்லியபடி கடந்து போகும் ஆண்களைக் காண்கையில் இணைந்து நடக்கக் கூட முடிவதில்லை. ஒரு முறை இப்படி தூசணம் பேசுகிற ஒருவனின் தொலைபேசிக்கு அநாமதேயமாய் அழைத்து அவன் உறுப்புக்களை சொல்லி திட்டித் தீத்த பின் தான் கோபம் அடங்கியது ஒரு மாற்றுச் சொல் கிடைத்த சந்தோசத்தில். ஒரு கன்னத்தை அறைந்தால் மறுகன்னத்தில் அறை என்பதற்கிணங்க இவை புழக்கத்தில் வரவேண்டும். தொடர்ச்சியாய் இப்படி செய்யின் இந்தச் சொற்களை உபயோகிக்கிறவர்கள் அதன் அர்த்தத்தை உணரக் கூடும்.