Friday, October 26, 2007

மூடப்பட்ட அறைகளுள்
ஏசி ஓடிக் கொண்டிருக்கிறது
மெழுகுதிரியை பத்த வைக்க முனைகிறேன்
தனித்திருக்கையில்
எப்படியெல்லாமோ உயிர்க்கத் தொடங்கிவிடுகிறது
தற்கொலைக்கான முனைப்பு
கடுகளவும் புரிய முடியாத மந்த மனோநிலை
எங்கிருந்தோ வந்துவிடுகிறது.
இருக்கின்ற தனிமையை, வாசிப்பை துளையிடுகிறது
துப்பாக்கி வேட்டுக்களையொத்த மரணத்தின் வாசனை
விளங்கவே முடியாதிருக்கின்ற போதுகளில்
வாசித்த எழுத்தூடாக எழுத்தாளர்கள் சுருக்கிட்டுக் கொள்கிறார்கள்
எங்கோ புரியாத மொழியிடையே வெறுமை நுழைந்து விடுகிறது.
தொலைபேசி அழைப்பில் அலைக்கழியப்பட்டு திசைதெரியாது பயணித்து
இறுதியில் கொலைக்கருவி காது வழியே வெளியேறி
எப்படியோ சாவு நிகழ்ந்து விடுகிறது.

9/29/07