Tuesday, January 30, 2007

சில்லுனு ஒரு காதல்


'காதலன் ஒருவனை கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து' என்ற பாரதியாரை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள், இன்னமும் படங்கள் சொல்லிக் கொண்டிருப்பது காதலனை அவனுக்கு கைகொடுக்கும் காதலிகளை.
'சில்லென்றொரு காதல்' -சராசரியான தமிழ் படம். காதலித்து கலியாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாள் கதாநாயகி ஆனால் அவளது திருமணம் பேச்சுத் திருமணம் ஆனாலும் அவளுடைய வாழ்வு கணவனுடன் சந்தோசமாகப் போகிறது . பேச்சுத் திருமணத்தால் எந்தக் காதலையும் இழக்கவில்லை என்பதை உணர்கிறாள். முழுமையான கணவன், சுட்டியான குழந்தை என்று நிறைவான வாழ்க்கை.
வேலைவிடயமாக கணவன் அமரிக்கா போகிறான். பரணை தட்டிய போது கணவனின் பழைய பொருட்கள் அடங்கிய பெட்டியிலிருந்து அவனுடைய நாட்குறிப்பை எடுத்து வாசிக்கிறாள்-அது அவளுடைய முழுமையான வாழ்க்கையை பிரட்டிப் போடுகிறது. அவன் கல்லூரியில் படித்த போது உருகி உருகி காதலித்த காதல் பெண் ஜஸ்வர்யா. அவள் மீதமான அவனுடை ய உரித்துணர்சி. அவள் மீதமான அவனுடைய ஆதீக்கம்/காதல் போன்ற தீவிர உணற்சியால் திருமண பதிவு அலுவலகத்தில் தாலி கட்டுகிறான் பின் திருமணத்தைப் பதிய விடாமல்அவனை அடித்து அவளை அவனிடமிருந்து பிரித்துப் போய்விடுகிறார்கள். சித்தப்பாவின் கடைசி ஆசையாய் குந்தவியை திருமணம் செய்கிறான். அதுவே முன் கதைச் சுருக்கம்.
அவன் டையரியில் குறிப்பிட்டிருப்பான் ஒரு நாள் அவ கூட வாழ்ந்திருந்தாக் கூட 100 வருசம் வாழ்ந்த திருப்தியோட இருந்திருப்பன் என. இது தான் படத்தோட கைலைற். மனைவி அவனுடைய பழைய காதலியை தேடிப் போய் அவளை வீட்டுக்கு அழைக்கிறாள். அவள் வருகிறாள். முன்னைப் போன்ற பயந்த சுபாவமுள்ளவள் இல்லை இப்போது தைரியசாலி,Australiaயாவில் 7 வருடம் வாழ்ந்தவள்.

மனைவி கணவனிடம் சொல்கிறாள் நான் உன்னைக் காதலிக்கிறேன் உன்னுடைய அந்த ஏக்கத்தை ஒரு நாளாவது வாழ வேண்டும் என்கிற துடிப்பை தன்னால் உணர முடியும் என்றும் அதற்காகவே அவளை அழைத்ததாயும் கூறுகிறாள்.
எனக்கு இந்தப் படத்தை அவனுக்கு பதிலாய் ஏன் அவளினது நிலையிலிருந்து எடுத்திருக்கக் கூடாது என நினைத்தேன். அது வித்தியாசமாகவேனும் இருந்திருக்கும். புதிய, வித்தியாசமான என்பது போன்ற சொற்களை உபயோகிக்க பொருத்தமாயும் இருக்கும். அவள்கள் எந்தக் காதலையும் கடந்திருக்க மாட்டார்களா? அல்லது அவர்களுடைய காதல் எல்லாம் ஆட்டோக்கிராப்பாக இருக்காதா? அப்போ அவைகள் எல்லாம் என்ன கல்வெட்டுக்களா? தாங்கள் நேசித்தவன்களின் பெயர்களை இவர்களுக்கு தெரிய வைக்க முடிகிறதா தாம் பெற்ற பிள்ளைகளுக்கு. ஆனால் இப்படத்தில் மகளின் பெயர் ஜஸ்வர்யா-அவனுடைய காதலியின் பெயர்.

என்னுடைய நண்பர் ஒருவரின் குழந்தை பிறந்தபோது அவர் மனைவி மிகவும் சிரமப்பட்டு மரணம் வரை சென்று மீண்டவர் அவருடைய மகளுடைய பெயர் அவருடைய முன்னாள் காதலியுடையது. எனக்கு அந்தப் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் பெத்த போது அவர் அநுபவித்த மரணவலி தான் நினைவுக்கு வரும். எந்த வலியையும் அநுபவிக்காத ஒருவர் தன்னுடைய நினைவுச் சின்னமாய் அந்த பெயரை வைத்தது அந்த மனைவிக்கு அவர் செய்த மிகப் பெரிய துரோகமாய் தான் படுவதுண்டு.

கடைசியாக தான் தன்னுடைய பழைய வாழ்க்கையை மனைவிக்கு சொல்லாததுக்கு காரணமாய் கெளதம் சொல்கிறான் அதை அவளால் தாங்க முடியாது என்று. தன்னுடைய கணவனின் பழைய வாழ்கை எந்தப் பெண்ணாலும் தாங்க முடியாது அந்தக் கஸ்ரத்தை தான் தன்னுடைய துணைக்கு தர முடியாது என்று நல்லது தான் அப்ப பழைய காதலியின் பெயரை வைத்ததை மட்டும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

எதிர்பாராத எதோ ஒரு பாலத்தடியில் சந்தித்த முன்னாள் காதலரைப் போன்று எதேச்சையாய் சந்தித்து ஆயிரம் கேள்விகளை எழுப்பிப் போகும் ஒரு தருணத்தில் பேசமுடியாத மெளனத்தை உணர்த்துவது போன்ற திரைப்படங்கள் பெண்களால் தான் உருவாக்க முடியும் போலும்.
பார்த்த முதல் நாளே/ஒன்றா ரெண்டா ஆசைகள்/வசீகரா-என்று பாடலில் பெண் உணர்வுகளை நெகிழ்ச்சியை பாசங்கற்று எழுதும் தாமரை போன்று பெண் இயக்குநர்கள் வரவேண்டும். பெண் உணர்வுகளை காதலை, காமத்தை, பிரிவை , உரித்துணர்ச்சியை அவை பெண் மொழியில் பேசவேண்டும்.
சமீபத்திய பெண் இயக்குனர்களில் ரேவதி(மித்ரா my friend, phir milenge) பிரியா(கண்ட நாள் முதல்)போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள்.

பி.கு
இதில் கண்டிக்கப்படவேண்டிய மிக முக்கியமான விடயம் திருநங்கைகளை கொச்சை படுத்துவது போன்றதான நச்சுவைக் காட்சிகள். நகைச்சுவையென்றாலே யாரையாவது கிண்டலடிப்பது என்றாகி விட்டது. Action படங்களில் இஸ்லாமியர்களை வில்லன்கள் ஆக்குவது போல (கொலிவூட் படங்களில் கம்யூனிஸ்டுகள் வில்லர்கள்) நகைச்சுவையென்றால் பெண், ஊனமுற்றவர்கள்(அரசியல் ரீதியாக சரியான சொற் பிரயோகம் என்ன?)என்பது போய் இப்போது எல்லாவிதமான சிறுபான்மையினர் மீதமான வக்கிரங்களே நகைச்சுவை என்று வந்து நிக்கிறது. சிறுபான்மையினர் மீதமான வக்கிரங்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அவை கண்டிக்க படவேண்டியவையே.
1/8/07

2 comments:

said...

இந்தப்படம் பார்த்தபோது எனக்கும் இந்தக் கேள்விகள் வந்தன..

said...

en amma adikakdi sollum puthagam.. oru oodhapu kanchimitugiradhu.

in this book the heroine is asked by her exlover to spend some time with him.
(she is married to someone else)
my mother used to describe this very poignantly. i have not read the book