Wednesday, January 10, 2007

The scent of green papaya



சிறுமி மூ, ஒரு வீட்டுக்கு வேலைக்காரியாக போகிறாள். அங்கு வேலைக்காரியாய் அவளுடைய சிறு பிராயம் கழிகிறது.
அவள் வயதொத்த வீட்டின் சிறுவன்கள் அவளை பயமுறுத்திக் கொண்டும் அவள் தோய்த்த ஆடைகளை எடுத்துக் கீழே போட்டும் அவள் வீடு கழுவுகிற வாளிக்குள் சிறுநீர் கழித்தும் அவளுக்கு சிரமம் கொடுக்கிறார்கள்.
மேலே முதிய மாமியாரும்,அந்தக் குடும்பத்தை நடத்துகிற அந்த வீட்டின் மருமகள் - என்றோ செத்துப் போன மகள் நினைவில் மூ மீது அன்பு செலுத்துகிறாள். அங்கு வேலைசெய்யும் வயது முதிர்ந்த வேலைக்காரி மூ வுக்கு பப்பாக் காயில் சமைக்கக் கற்றுக் கொடுக்கிறாள். காயாய் மரத்திலிருந்து பப்பாக் காயை பிடுங்கும் போது விழுகிற பால் முதல் இலை, குழை, வீடு (நாற்சார் வீடு போன்ற ஒரு வீடு) என்று எல்லாமே எமக்கு பழக்கமான ஒரு உணர்வு. துல்லியமான ஒளிப்பதிவு. அடிக்கடி மூவைத் தேடி வந்து மேலே இருக்கும் கிழவியின் நலன் விசாரித்துப் போகும் கிழவன். அவளை ஒரு முறையாவது பார்க்க எப்படியாவது சந்தர்ப்பம் கேட்டு அவளைக் கேட்ட படி. பொறுப்பற்று முன்பொருமுறை காசுடன் வீட்டை விட்டு ஓடிய வீட்டு முதலாளி, எப்போதும் எதோ துக்கத்தில் திரியும் அவருடைய மனைவி.
அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் ஒரு இசைஞன், மூத்த மகனின் நண்பன். அவன்மீது ஈர்ப்பு உண்டாகிறது சிறுமி மூவுக்கு. தகப்பன் திரும்பவும் மனைவியின் காசையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறான். வீட்டில் சிரமமான நிலை. கிழவி மருமகளையே குறை சொல்லுகிறார்.
பத்து வருடங்கள் கழிகிறது மூ இப்போது பெரிய மனுசி. வீட்டுக்கார அம்மா வருத்தமாய் படுத்த படுக்கையில் (கிழவி இருந்த இடத்தில்). வீட்டுக்கு மூத்த மருமகள் அவள் இடத்தில். ஒரு வேலைக்காரி வைக்கிற நிலையில் அவர்கள் இல்லை என்பதால் அவளை அவளுக்கு பிடித்தமான அந்த இசைஞர் வீட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறார்கள். போகும் போது அந்த அம்மா மகளைப் போல் சீனத்து பாரம்பரிய உடையும் காப்பும் கொடுதத்தனுப்புகிறார்.
ஆரம்பத்தில் அவளைக் கண்டு கொள்ளாத இசைஞன் பின்னர் அவளுடைய வேலைகளால் அவளை உணர்கிறான். அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறான் பின்னர் இருவரும் மணக்கின்றனர். திரைப்படம் முடிகிறது.
ஒரு சிறுமியின் வாழ்வு பற்றியதே இந்தப் படம்.
அவள் சிறுமியாய் இருந்த போதே என்னைப் பொறுத்த வரை என்னுடைய கதை முடிந்து விட்டது அதுவும் பெரிய மூவை சிறுமி அளவுக்கு இரசிக்க முடியவில்லை. சிறுமியாய் பூச்சியை எறும்பை இரசிப்பதை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு வளந்தவளாய் காட்டும் போது ஏதோ பொருந்தாதது போன்ற உணர்வு. பெரிய மூ இயல்பாய் வரவில்லை. பின்னர் அவளுடைய வாழ்வும் அவ்வளவு யதார்த்தமாய் இருக்கவில்லை..

1 comments:

said...

இந்த படம் கேள்விப்பட்டதில்லை

கொஞ்சம் மேலதிக தகவல்களை தர முடியுமா?

:)